Thursday 22 October 2015

எனது உளறல்கள்

 என்  உயிர் அம்மா.....

பத்து மாதம் சுமந்தது போதாது என்று
நித்தமும் என்னை மனதில் சுமக்கும் பதுமை அவள்!

என் பாசம் பெரிதா உன் பாசம் பெரிதா என்று

பல முறை போட்டி போட்டு
இறுதிவரை ஜெயிக்கவில்லை நான் !

சாப்பிட முடியவில்லை என்னால்

உன் அன்பின் மிகுதியால்
எப்பவோ நிரம்பிவிட்டது மனமும் வயிறும், 

மறுபடியும் உன் வயிற்றில் 

தஞ்சம் புக ஆசையாகத் தான் இருக்கிறது,

வேறு எங்கு கிடைக்கும் அந்த பாதுகாப்பும் பரிசமும்.......


==============================================================


வருவாயோ? 


மழையே

இங்கு உன்னை நோக்கி 
பல விடியல்கள்,

வாழ்வில் 

வளம் கொழிக்க
விளக்கேற்ற 
நீ வருவாய் 
என்ற நம்பிக்கையில்
உன் வரவை நோக்கி 
காத்துக்கொண்டிருக்கிறது இந்த உலகம்.......
==========================================================

2 comments:

  1. சூப்பர்... ரொம்ப நல்லா இருக்கு சுபி...

    ReplyDelete