1. எலுமிச்சை:-
* தலையில் பொடுகு இருந்தால் எலுமிச்சைச் சாறை சிறிது நீரில் கலந்து
தலையில் மசாஜ் செய்து 10 நிமிடம் ஊறவைத்து அலசினால்
பொடுகு சரியாகிவிடும், முடி உதிர்தலும் குறையும்.
* அதே போல் தலைக் குளித்ததும் கடைசி கப் தண்ணீரீல்
எலுமிச்சையைச் சாறை சேர்த்து தலைமுடி அலசினால்
முடிக் கொட்டுவது குறையும். முடியும் பளப் பளப்பாக இருக்கும்.
எலுமிச்சையைச் சாறை சேர்த்து தலைமுடி அலசினால்
முடிக் கொட்டுவது குறையும். முடியும் பளப் பளப்பாக இருக்கும்.
2) வேப்பிலை: -
* தலையில் பேன் தொல்லை இருந்தால் வேப்பிலையை அரைத்து
தலையில் 15 நிமிடம் ஊற வைத்து அலசினால் பேன்தொல்லை
போய்விடும்.
* வேப்பிலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரில்
தலைமுடி அலசினால் முடிக் கொட்டுவது குறையும்.
தலைமுடி அலசினால் முடிக் கொட்டுவது குறையும்.
* வேப்பிலையை அரைத்து கால் பித்த வெடிப்பு உள்ள இடங்களில்
தடவினால் சீக்கிரம் சரியாகிவிடும்.
* முகப் பரு உள்ள இடத்தில் தடவினால் விரைவில் குணமாகும்.
* முக்கியமாக அம்மை நோய்க்கு சிறந்த கிருமி நாசினி.
* சிறிது வேப்பிலையை 4, 5, மிளகுடன் சாப்பிட வைரஸ் காய்ச்சல் வராமல்
பாதுகாத்துக் கொள்ளலாம்.
3) வெந்தயம் :
* வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊறவைத்து அதை மறு நாள்
வெறும் வயிற்றில் மென்று சாப்பிட உடல் உஷ்ணம் குறையும்.
வயிற்று புண்ணுக்கு நல்லது.
* நீரிழிவு நோய் வராமல் தடுக்கும். ஏற்கனவே இருந்தால்
அதைக் கட்டுக்குள் வைக்க உதவும்.
வறுத்து பொடி செய்து வைத்து தினமும் நீரில் கலந்தும் சாப்பிடலாம்.
* மாதவிலக்கு ஏற்படும் போது வரும் வயிற்று வலி குறையும்.
* வெந்தயத்தை முதல் நாள் ஊறவைத்து மறு நாள் அரைத்து
தலையில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து குளித்தால்
உடல் குளிர்ச்சி அடையும், முடிக் கொட்டுவது நிற்கும்.
முடி நன்கு அடர்த்தியாக வளரும்.
நெய்;-
* தொண்டை வலியினால் அவதிபடுவோர் நெய்யுடன் சிறிது ஜீனி சேர்த்து
தொண்டையில் படும் படி சாப்பிட்டால் வலி பெருமளவு குறையும்.
* தொண்டை புண் சரியாகும்.
* நெய்யினை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்றில்
அமிலத் தன்மையை சமன்செய்து வயிறு புண் ஆவதை தடுக்கும்.
ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
* உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
தொடரும்...............
குறிப்புகள் அனைத்தும் அருமை
ReplyDeleteதாங்க் யூக்கா......
Deleteசுபி
ReplyDeleteயூஸ்புல்லான குறிப்புகள் தேங்க்ஸ் மா
ஓ வெல்கம் அபி....
Deleteஓ வெல்கம் அபி....
Delete